Skip to main content

Super Tamils

இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படம் மீது கல்லெறிதல்…! சர்வதேச கவனத்தை ஈர்த்த சம்பவம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக் கல்லெறிதல்” என்ற குறியீட்டு சடங்கில் ரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீமையான விஷயங்களை முற்றிலும் நிராகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஹஜ் யாத்திரையின் போது சாத்தானைக் குறிக்கும் தூண்களை நோக்கி சிறிய கற்களை எறியும் ஒரு பாரம்பரிய சடங்கு வழக்கத்தில் உள்ளது. அதே பாணியைப் பின்பற்றித்தான் தற்போதைய இந்தச் செயலும் […]

Read More

யுக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…! 12 பேர் பலி – 40-க்கும் மேற்பட்டோர் காயம்.

ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதலை அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி வன்மையாகக் கண்டித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு “பயங்கரவாதச் செயல்” இது என அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யப் படைகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களால் யுக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள், மக்கள் வாழும் குடியிருப்புப் […]

Read More

போர் பதற்றத்தால் சிக்கிய ஆயிரக்கணக்கான மாலுமிகள்…!மீட்புக்கு தயாரான சர்வதேச கடல்சார் அமைப்பு.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மீட்கத் தயாராகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறுகையில், ஈரான், ஓமான், அமெரிக்கா மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகளுடன் இணைந்து கடல்சார் தொழில்துறையின் முழு ஒத்துழைப்போடு இந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இந்த மீட்புப் பணிகளைப் […]

Read More

பிரிட்டனை உலுக்கும் கலவரம்…!வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை – கீர் ஸ்டார்மர் எச்சரிக்கை.

தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு ஸ்டார்மர் வலியுறுத்தல்  பிரிட்டனில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இனவெறி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஒரு மாணவனின் மரணம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் கொடூரமான முறையில் இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ‘ரிஃபார்ம் UK’ அமைப்பின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை […]

Read More