பசுவை திருடி இறைச்சிக்காக விற்ற அதிர்ச்சி…! சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது
வவுனியா, மாமடுவ பகுதியில் சினைப் பசு ஒன்றை திருடி விற்ற விவகாரம் தொடர்பாக, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவருடன் சேர்த்து மொத்தம் மூன்று பேரை மாமடுவ பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசு மாடு ஒன்று காணாமல் போனதாகப் பதிவான புகாரின் அடிப்படையில், மாமடுவ பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவிலேயே சம்பந்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் பிடிபட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் அப்பகுதியில் […]