அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதப் பணம், இன்றைய தினம் (29) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகாரப்பூர்வமாகச் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தங்களுக்குரிய உதவித்தொகையை பயனாளிகள் அனைவரும் இன்றைய நாளில் இருந்து தங்களுடைய ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் மூலமாக நேரடியாகவே எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதக் கொடுப்பனவாக, […]