காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின் மகளைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் அறையில் ரகசியமாக வைத்திருந்த கேமராவில் பதிவான காட்சிகளே இந்தத் திருட்டைக் காட்டிக்கொடுத்துள்ளன. சந்தேக நபரான அந்த இளம்பெண், சுற்றுலாப் பயணிகள் இல்லாத நேரத்தில் பலமுறை ரகசியமாக அறைக்குள் நுழைவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விடுதியில் இதற்கு முன்னரும் பலமுறை இது போன்ற திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், இந்தத் திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நீடிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 19 வயதுடைய அந்தப் பெண், இன்றைய தினம் (24) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
The Unawatuna Tourist Police arrested a 19-year-old girl, the daughter of a guest house owner, for allegedly stealing 620,000 rupees from a Russian tourist in Pillagoda. The theft was uncovered after hidden camera footage installed by the tourists showed the suspect secretly entering their room multiple times. Following reports of prior thefts at the same location, the suspect is set to be produced before the Galle Magistrate’s Court today (24th).