கொழும்பில் உள்ள ஒரு முன்னணிப் பள்ளியில் மாணவர் ஒருவருக்கும், மூன்று ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு குறித்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தை கல்வி அமைச்சு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்தக் காட்சிகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே கல்வி அமைச்சின் தற்போதைய முடிவாக உள்ளது. இது தொடர்பாக அந்தப் பள்ளியின் அதிபரிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
அதிபர் சமர்ப்பிக்கும் அந்த அறிக்கையின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செயலாளர் கலுவேவா தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ஆதாரப்பூர்வமான அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட எந்த முடிவுகளையும் உடனடியாக எடுக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அந்த மாணவர், ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________
The Ministry of Education has launched an investigation into viral social media videos depicting an alleged inappropriate relationship between a student and three female teachers at a prominent school in Colombo. Education Secretary Nalaka Kaluwewa has directed the school principal to submit a detailed report, stating that formal disciplinary actions will only be initiated following a thorough review of the findings.