கடந்த 16ஆம் திகதி இரவு ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 44 வயதான ஒரு குடும்பத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் காயமடைந்து, தற்போது கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த ஒரு கும்பலே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு உதவியதாகக் கருதப்படும் நபர் ஒருவரை, ஹெட்டியாவத்தை பகுதியில் வைத்து நேற்று பகல் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்போது அவர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள 63 வயதுடைய சந்தேக நபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் குறித்து கரையோர பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
___________________________________________________________________________________________________
The Colombo North Regional Crime Prevention Division has arrested a 63-year-old suspect in Hettiyawatta for assisting in a fatal shooting that occurred on January 16th in Jinthupitiya. The incident resulted in the death of a 44-year-old man and left two children injured, while a three-wheeler used in the crime has been seized as investigations continue.