மாறுவேடத்தில் சுட்டுக் கொலை: உதவியாளருக்கும் பேரிடி
கடந்த 16ஆம் திகதி இரவு ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 44 வயதான ஒரு குடும்பத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் காயமடைந்து, தற்போது கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த ஒரு கும்பலே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு உதவியதாகக் கருதப்படும் […]