Skip to main content

Super Tamils

பசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி…! பிணைத்தொகையை பறிமுதல் செய்ய உத்தரவு – திறந்த பிடியாணையும் நீடிப்பு.

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதிபதி சதுர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து முன்னிலையாகாமல் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது பிணைக்கு பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறினால் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையான அதேவேளை, அரசுத் தரப்பில் FCID அதிகாரிகளும், பிரதிவாதிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

A Matara magistrate court has ordered the forfeiture of bail for former minister Basil Rajapaksa after he repeatedly failed to appear in court regarding a case over purchasing land with improperly acquired funds, while extending his open warrant.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்