அதிகரிக்கும் வெப்பநிலை…! பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.
நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் விசேட வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனித உடல் உணரக்கூடிய வெப்ப அளவு இந்த குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை மட்டத்தை’ தொடக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறக் காற்றின் ஈரப்பதமும் அதிகபட்ச வெப்பநிலையும் இணைந்துதான் இந்த வெப்ப சுட்டெண் அளவீடு கணக்கிடப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. அதிக நேரம் வெயிலில் […]