கட்டுநாயக்கிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் ஆபத்து…! நள்ளிரவில் பரபரப்பு.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL606 என்ற விமானம் வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது. ஆனால், கிளம்பிய சில நிமிடங்களிலேயே அது மீண்டும் கொழும்பு நோக்கித் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் […]