Skip to main content

Super Tamils

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச கவனம்… நேரில் வரும் ஐரோப்பியத் தூதுவர் குழு!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிடுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் உட்பட நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதுக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளனர். குறிப்பாக, எதிர்வரும் புதன்கிழமை (22 ஆம் திகதி) பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் இணைந்து இந்த இடத்தைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இக்குழுவினர், 22 ஆம் திகதி செம்மணிப் புதைகுழிக்குச் […]

Read More

கம்பஹா பகுதியில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைக்குண்டுகள் மீட்பு – ஒருவர் கைது

கம்பஹா மாவட்டத்தின் யக்கல பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த இந்த ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஜூலை 16 அன்று இரவு, கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் யக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த நபர் சிக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு இந்த சோதனையின் […]

Read More

காணாமல்போன பௌத்த துறவி…! அடர்ந்த காட்டில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், காணாமல் போன பௌத்த துறவி ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயிருந்த, தெபரகல ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த பம்பரகல அபயவன்ச தேரருடைய எலும்புகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த எலும்புகள் சேனாசனத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆரண்யத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த எலும்புகள் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுக்குள் தேன் […]

Read More