பணம் அனுப்பாத மனைவியை மிரட்ட பிள்ளைகள் மீது கொடூர தாக்குதல்…! வைரலான காணொளியால் சிக்கிய 25 வயது தந்தை கைது.
பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டில் உள்ள தன் மனைவியிடம் பணம் கேட்டுத்தான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் அந்த நந்தை மிரட்டியுள்ளதாகக் […]