முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்யும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த புதிய உத்தரவானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு […]