கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்
குடும்பத் தகராறு காரணமாக பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த இந்த இளம்பெண், கணவனின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அரலகன்வில மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிதடியில் முடிந்த இந்த விபரீதத்திற்கு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே காரணம் என்பது காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]