Skip to main content

Super Tamils

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன பகுதி பொது சுகாதார பரிசோதகர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த அபராதத் தொகையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், […]

Read More

உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்துவந்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய இருவரையும் திடீரென காணவில்லை. இது தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் […]

Read More

கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு அரங்கேறிய இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர், அவசர சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள பிரதான வீதியோரம் அமைந்திருந்த வழிபாட்டிடத்தில், வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தின் மீது […]

Read More

கொழும்பு போர்ட் சிட்டி கடலில் இளைஞர் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, துறைமுகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்திருந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய கொழும்பு துறைமுகப் பொலிஸார் தீவிர […]

Read More

டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலியான இணைய இணைப்புகளை உருவாக்கி, மிகத் தந்திரமான முறையில் பெண்களின் கைபேசிகளுக்குள் ஊடுருவி வந்துள்ளார். அங்கிருந்த தனிப்பட்ட வீடியோக்களைத் திருடி, பின்னர் வட்ஸ்அப் ஊடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே […]

Read More

காதலியின் வாழ்வை பறித்த காதலர் தின இரவு

கொழும்பு, கடுவெலை பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காதலர் தின இரவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த பெண் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கடுமையான வாக்குவாதம் காரணமாக அவர் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவருகிறது. இந்தக் கவலையினால் ஏற்பட்ட விரக்தியிலேயே, காதலர் தினமான நேற்று முன்தினம் அவர் தவறான […]

Read More