20 நாட்களில் தீர்ப்பு…!சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 4 குற்றவாளிகளுக்கு 101 ஆண்டு சிறை.
பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம், மிகக் குறுகிய காலமான வெறும் 20 நாட்களுக்குள் நான்கு குற்றவாளிகளுக்கு மொத்தமாக 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரால் இந்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் […]