கிளிநொச்சியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவன் காயங்களுடன் தப்பினார். தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி வரும் அந்த மாணவன், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரீட்சை முடிந்து வீடு திரும்பியவர், பின்னர் மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான மாணவனிடம் வாகனத்தைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என போக்குவரத்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
_____________________________________________________________________________________________________________________________________
An O/L student in Kilinochchi survived a motorcycle accident with minor injuries after losing control of the vehicle while heading to a shop after his exam. Police investigations revealed that the student did not possess a valid driving license, and further inquiries are ongoing.