அரியாலை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் அவரது மகள் வீட்டின் அருகே இருந்த குப்பைகளுக்குத் தீ மூட்டிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், அந்தத் தாய் தனது அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, ஜன்னல் வழியாக உள்ளே பரவிய தீ, அங்கிருந்த ஆடைகளில் பற்றியதுடன் வீட்டின் கூரை மரங்களிலும் வேகமாகப் பரவியது. கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் மீதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது மற்றொரு மகள் ஓடி வந்து அவரை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
__________________________________________________________________________________________
An 81-year-old woman from Ariyalai, Jaffna, passed away due to severe burn injuries after a fire, initially lit by her daughter to burn rubbish outside, spread into her bedroom while she was asleep. Despite being rescued by another daughter and receiving treatment at the Jaffna Teaching Hospital, she succumbed to her injuries, leading to an official inquest by the Coroner.