சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று திருடப்பட்டமை குறித்து, கடந்த 2025.10.21 அன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று கெஸ்பேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் உரகஸ்மன்ஹந்திய, யட்டகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பகுதிகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளையும், ஹோமகம பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் திருடியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நேற்று (28) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அவரிடம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
___________________________________________________________________________________________
The Uragasmanhandiya police arrested a 44-year-old man in Kesbewa for the theft of a car valued at 8 million rupees, following a complaint lodged in October 2025. Investigations revealed that the suspect was also involved in stealing two three-wheelers in Elpitiya and Batheegama, as well as two motorcycles in Homagama. He has been remanded in police custody for seven days for further interrogation after being produced before the Elpitiya Magistrate’s Court.