வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்பகுதியின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்தவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த மையம் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், முறையான மேலாண்மை மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால், பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்துள்ளது. அங்கு கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் மற்றும் இயந்திர சாதனங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி பாழடைந்துள்ளதுடன், பல பொருட்கள் திருடப்பட்டும் உள்ளன.
தற்போது இந்த இடத்திற்கு வருபவர்களில் அதிகமானோர் சுற்றுலாவை நோக்கமாகக் கொள்ளாமல், சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் பல தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனவே, சமூகச் சீரழிவை நோக்கிச் செல்லும் மண்டைதீவு சுற்றுலா மையத்தை தற்போது நிர்வகித்து வரும் தனியார் தரப்பினரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், இழந்த வருமானத்தை மீட்டெடுக்கவும், இந்தப் பகுதியைச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
_____________________________________________________________________________________________________________________________________________
Velanai Pradeshiya Sabha member Anusiya Jeyakanth has urged authorities to rescue the Mandaitivu tourism site from increasing anti-social activities. Despite being established in 2016 with a 77 million rupee investment, the site has failed due to poor maintenance and mismanagement, resulting in damaged equipment and loss of revenue, while becoming a hub for social misconduct.