நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் தான் கரம் பிடித்துள்ளார். இவர்களது மணவாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக அந்த இளைஞர் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி முட்டுக்கட்டை போட்டு அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த புதுமாப்பிள்ளை, யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த கையோடு இளைஞர் எடுத்த இந்த முடிவு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A 22-year-old newlywed from Tiruvannamalai committed suicide just one month after his love marriage following a dispute with his wife. The tragedy occurred after his wife reportedly restricted and scolded him for wanting to go out and meet his friends. Finding him unresponsive in his room, family members discovered him hanging, prompting a police investigation into the matter.