செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஹூதி அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஏமனின் தற்போதைய அரசியல், மனிதாபிமான சூழ்நிலைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் ஹான்ஸ் க்ரண்ட்பெர்க்குடன் ஏமன் வெளியுறவு அமைச்சர் அஃப்ரா அல்ஜூபா ஆலோசனை நடத்தியுள்ளார்.
செங்கடல், பாப் அல்-மந்தப் மற்றும் ஏமன் வளைகுடா பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு, பிராந்திய அளவிலான மோதல்களை தீவிரப்படுத்த ஏமன் மண்ணைப் பயன்படுத்தி வருகின்றதாகவும் அமைதி நடவடிக்கைகளில் ஹூதி அமைப்பினர் தீவிரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஏமன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐ.நா தூதர் ஹான்ஸ் க்ரண்ட்பெர்க் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், ஏமனில் நிலையான பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த, நீதியான மற்றும் முழுமையான அரசியல் அமைதி செயல்முறையை முன்னெடுத்துச் செல்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Yemeni Foreign Minister Afrah Alzouba met with UN Special Envoy Hans Grundberg to discuss Houthi attacks on commercial shipping in the Red Sea and the broader political and humanitarian situation in Yemen.