ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை, பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் வரலாற்றுச் சாதனை ஒன்று பேராதெனியவில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பேராதெனிய போதனா மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இணைந்து, கடந்த ஜூன் 10ஆம் தேதி மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.
இந்த அரிய சிகிச்சையின் மூலம், லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யா என்ற ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இரு தனித்தனி மனிதர்களாகப் பிரிக்கப்பட்டனர்.
மாவனெல்ல, அரநாயக்க பகுதியைச் சேர்ந்த இந்த இரட்டையர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே, அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில், குழந்தைகளைப் பிரிப்பதற்கான இறுதி அறுவை சிகிச்சையைச் செய்வதற்கு முன்னதாக, மருத்துவக் குழுவினர் பல்வேறு விரிவான ஆய்வுகளையும், முறையான திட்டமிடல்களையும், பல பூர்வாங்க சிகிச்சைகளையும் மேற்கொண்டு தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.
இலங்கை மருத்துவ வரலாற்றிலேயே சிறுவர் நலப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிக்கலான மற்றும் சவாலான அறுவை சிகிச்சைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன் முடிவில், இரண்டு குழந்தைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு புது வாழ்வு பெற்றுள்ளனர்.
இந்த இமாலயச் சாதனை, இலங்கை மருத்துவ நிபுணர்களின் அசாத்திய திறமை, அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவப் புலமைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகப் போற்றப்படுகிறது.
Medical experts in Sri Lanka have achieved a historic milestone by successfully separating five-year-old conjoined twins, Linuli Tarulya and Lithuli Manulya, at Peradeniya. This highly complex pediatric surgery was performed following years of close monitoring, detailed planning, and extensive preparation, earning widespread praise for the skills and dedication of the country’s medical specialists.