விமான நிலைய வீதியில் – அனுராதபுரம் சம்பவித்த கோர விபத்தில், பொலிஸார் தெரிவித்துள்ளதன் படி பெண் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற கர்ப்பிணிப் பெண்ணே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.அப்போது எதிரே வந்த ஒரு சிறிய லொறி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விபத்தின் கொடூரம் காரணமாக அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவமனைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக லொறியைச் செலுத்திய 27 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவரக்குளம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
A tragic road accident on Airport Road in Anuradhapura claimed the life of a 32-year-old pregnant woman, who was working as a Grama Niladhari. The incident occurred when a small lorry collided with the motorcycle she was riding along with another woman. Despite receiving intensive care at the hospital, both the woman and her unborn child passed away. The 27-year-old lorry driver has been arrested, and the Kawarakkulama police are conducting further investigations.