சீனாவை புரட்டிப்போட்ட ‘டால்பின்’ புயல்…! 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம் – 1,500 விமானங்கள் ரத்து.
ஞாயிற்றுக்கிழமை மாலை ‘டால்பின்’ புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, ஷாங்காய் உள்ளிட்ட கிழக்குச் சீனப் பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, முதலில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் (Yuhuan) பகுதியில் மாலை 5:30 மணிக்கு, மணிக்கு 94 மைல் வரையிலான அதிகபட்ச காற்று வேகத்துடன் கரையைக் கடந்துள்ளது; அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வென்ஜோ (Wenzhou) நகரத்தில் இரண்டாவது முறையாகக் கரையைக் கடந்துள்ளது. […]