உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்…! மாணவர்களுக்காக 1,700 விசேட பேருந்துகள்…! தொடருந்து சேவைகளிலும் சிறப்பு ஏற்பாடு.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் வசதிகளைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் முதல் பல சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா அவர்கள் கூறுகையில், ஏறக்குறைய 1,700 ‘சிசு செரிய’ பேருந்துகள் பயணிகளின் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மறுபுறம், இந்த உயர்தரப் பரீட்சைக் காலம் முழுமையாக நிறைவடையும் வரை […]