அதிகாரி இல்லா வவுனியா; மக்கள் அலைக்கழிவு
வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீண்ட தூரம் கடந்து வரும் மக்களை, அங்குள்ள உத்தியோகத்தர்கள் உரிய அதிகாரிகள் கையொப்பமிட இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். தமக்கென நிரந்தரப் பதிவாளர் ஒருவர் இல்லாத காரணத்தால், அடிக்கடி இவ்வாறான ஏமாற்றமான சூழலைச் சந்திக்க நேரிடுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் […]