அர்ச்சுனாவின் நடத்தை குறித்து சபாநாயகரிடம் முறையிட்ட கஜேந்திரகுமார்.
நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுமாறு, சபாநாயகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற சபைக்குள் எனக்கு இடப்பக்கமாக அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போதும் சரி, சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளிலும் சரி, என்னைத் தொடர்ந்து மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அதுமட்டுமன்றி, எனக்கு வன்முறை அச்சுறுத்தல்களையும் அவர் விடுத்து வருகிறார். இந்த மாதிரியான […]