வவுனியா வடக்கு பிரதேச சபையில் தவிசாளர் மாற்றம்? தமிழரசு கட்சியின் முக்கிய தீர்மானம்!
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரைப் பதவியிலிருந்து மாற்றுவது குறித்து, தமிழரசு கட்சியின் மாவட்டக் குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர், பிரதேச சபைகளின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது சுழற்சி முறையில் தங்களது உறுப்பினர்களுக்கு தவிசாளர் பதவிகளை வழங்குவதென அக்கட்சி முன்பே தீர்மானித்திருந்தது. இந்த முடிவின்படி, முதல் ஒரு வருட காலத்திற்கு தற்போதைய தவிசாளரான கிருஷ்ணவேணிக்கு இப்பதவியை வழங்குவதென்றும், அடுத்த வருடத்தில் மற்றுமொரு உறுப்பினருக்கு இதனை வழங்குவதென்றும் கட்சியின் மாவட்டக் குழு முடிவு […]