இந்தோனேசியாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்…! புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அதிர்வு பதிவு.
புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் இந்தோனேசியாவின் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி, இந்த நிலநடுக்கம் இன்று (17.08.2026) அதிகாலை 12:46 மணியளவில் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கமானது, ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறு புள்ளிகளில் கண்டறியப்பட்டது. இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் தேதியன்று 7.7 மெக்னிடியூட் அளவில் மிக சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]