கடவுச்சீட்டு பெற நேரில் வர தேவையில்லை
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இந்த அவசரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத காரணத்தால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் […]