15 நோயாளிகளைக் கொன்ற ஜேர்மன் மருத்துவருக்கு ஆயுள் தண்டனை.
ஜேர்மனியில் பல டசின் கொலைகள் தொடர்பாக ஒரு மருத்துவர் மீது தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரையிலான காலப்பகுதியில், நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளித்த ஜோஹன்னஸ் என்ற 41 வயது மருத்துவருக்கு பெர்லின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்துகளைக் கொடுத்து 12 பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என மொத்தம் 15 பேரைக் கொன்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. […]