பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்துப் பகிர்கையில்: மட்டக்களப்புச் சிறைக்குள் சென்று பிள்ளையானை மகிந்த ராஜபக்ச நேரில் சந்தித்துப் பேசினார் என்று சனல் 4 ஊடகத்தில் அசாத் மௌலானா முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். […]