புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி..! வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் – 3 பேர் விளக்கமறியலில்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் கடந்த 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம் […]