“கோட்டாபயவை கலங்க வைத்த ரகசிய கோப்பு… அநுர வெளியிடப் போவது என்ன?”
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதில் தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான மிக வலுவான ஆதாரங்கள் தற்போதைய அரசிடம் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கைது நடவடிக்கைகளுக்கான அடுத்தடுத்த கட்ட வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து வருவதால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெரும் கலக்கத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அவருக்கு […]