Skip to main content

Super Tamils

H5N1 பறவைக் காய்ச்சல் தீவிரமடையும் அபாயம்..! அவுஸ்திரேலியா விடுத்த எச்சரிக்கை.

அவுஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த நாட்டின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அடிலெய்டு நகருக்குத் தெற்கேயுள்ள கேப் ஜாஃபா (Cape Jaffa) கடற்கரைப் பகுதியில், ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பணியின் போது, 49 இறந்த பறவைகளும் 35 நோய்வாய்ப்பட்ட கிரேட்டர் க்ரெஸ்டெட் டெர்ன் (Greater Crested Terns) வகைக் கடல் பறவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலமாக, அந்தப் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக […]

Read More

42 இலட்சம் கிலோ காலாவதியான சீனி பறிமுதல்..களஞ்சியசாலைக்குச் சீல்!

காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று (07.07.2026) அதிரடியாக முற்றுகையிட்டுச் சீல் வைத்துள்ளனர். களனி – பேலியகொட பகுதியில் இருக்கும் இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவரின் பெரிய கிடங்கில் தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. இதப்பற்றி வலான மத்திய ஊழல் […]

Read More

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன பகுதி பொது சுகாதார பரிசோதகர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், இந்த அபராதத் தொகையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு பொது சுகாதார பரிசோதகரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், […]

Read More

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்…!29 உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பும் நிலை.

தற்போதைய நிலையில் நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் டெங்கு கொசுக்கள் பெருகும் சூழல் மிக மோசமாக இருப்பதாக அந்தச் சங்கத்தின் தற்காலிகத் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய சுற்றறிக்கை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று (24) முதல் நாளை மறுநாள் (26) […]

Read More