“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள விவசாயி கு.விநாயகமூர்த்தியின் வயலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர்களுடன் கௌரவ விருந்தினர்களாக விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி […]