“எதிர்ப்பாளர்களை எதிரிகளாக சித்தரிக்கும் ஆட்சி…!நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முழக்கம் – எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம்! அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைத் தன் எதிரிகளாகவே நினைக்கும் ஒரு அரசியல் சூழலில்தான், நாம் அடுத்த அரசியல் சக்தியாக உருவெடுக்கத் தயாராக வேண்டியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால், உடனடியாக அவர்கள் ஊழல்வாதிகள் என்றோ திருடர்கள் என்றோ முத்திரை குத்தப்படுகிறார்கள். அதேபோல், நெல்லுக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் குடிகாரர்களாகவும், தங்களது […]