அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.
அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், ‘மெனிஞ்சைடிஸ்’ என்று அழைக்கப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தற்சமயம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதி ஒருவர் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையினர் இது குறித்து மிக விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சிறைச்சாலை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இருவருக்கு இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு […]