நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்…!29 உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பும் நிலை.
தற்போதைய நிலையில் நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் டெங்கு கொசுக்கள் பெருகும் சூழல் மிக மோசமாக இருப்பதாக அந்தச் சங்கத்தின் தற்காலிகத் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய சுற்றறிக்கை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று (24) முதல் நாளை மறுநாள் (26) […]