டெங்கு பரவல் தீவிரம்…! 53 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் – 31 உயிரிழப்புகள்.
நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 7,188 இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சாதகமான சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் தங்களது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த ஆறாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர ஏற்பாடுகள் […]