Skip to main content

Super Tamils

கடல்வழி முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டனர். ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையிலேயே இந்த நிகழ்வு அரங்கேறியதாக அந்த அதிகாரி விவரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் முறைப்படி […]

Read More

அமைதியை நோக்கி புதிய நகர்வு…! போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐரோப்பா

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஐரோப்பிய தலைவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அமைதி முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் மிக முக்கிய பங்காற்றப் போவதாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய நாட்டுத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முழுமையான பங்களிப்போடு, உக்ரைனும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், இதன் மூலம் இந்த கொடூரப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் […]

Read More

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்…!அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தங்கியிருக்கும் மற்றும் அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அமெரிக்க குடிமக்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க தூதரகங்கள் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளிலும் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் […]

Read More

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 15ஆவது நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, தடயவியல் நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் […]

Read More