காலாவதியான மருத்துவப் பொருட்கள்…! இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்…! கேகாலை தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.2 இலட்சம் அபராதம்.
காலாவதியான மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தியதும், சேமித்து வைத்திருந்ததும், இரத்தப் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததும் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2026 ஜூலை 24 அன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனை மீது மூன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. நுகர்வோர் அதிகாரசபையின் சோதனையின் போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்கான கட்டுப்பாட்டு விலை 400 ரூபாயாக இருக்க, […]