விக்ரம் வெளியிட்ட குரங்கு வீடியோவால் சிக்கிய பண்ணை…! அதிரடி சோதனையில் 11 அரிய வெளிநாட்டு வனவிலங்குகள் பறிமுதல்.
நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட காணொளி வைரலான நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பண்ணை ஒன்றில் வனத்துறையினர் அதிரடியாகச் சோதனைகளை மேற்கொண்டனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எந்தவித முறையான ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாகப் பராமரிக்கப்பட்டு வந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்குகளை வனத்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் […]