2019 தேர்தல் மீண்டும் சர்ச்சை…!அலி சப்ரி, மகிந்த தேசப்பிரிய மீது ஊழல் குற்றச்சாட்டு.
2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்சவிற்கு சட்டவிரோதமான சலுகையையும் ஆதரவையும் வழங்கிய விவகாரம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி மற்றும், முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளரான மகிந்த தேசப்பிரிய ஆகிய இருவருக்குமே எதிராக இந்தத் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இவர்கள் இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் கூறி, அதற்குரிய சான்றாதாரங்களுடன் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் […]