3 விபத்துகள்: 3 பேர் பலி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கோரமான வீதி விபத்துக்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லக்கல, பதுளை மற்றும் நவகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்கல பகுதியில் உள்ள பகமூன – ஹெட்டியப்பொல வீதியில், டிப்பர் வாகனம் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. […]