Skip to main content

Super Tamils

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கைத் தாண்டிப் போர் வெடிக்கும்…!ஈரான் அதிரடி எச்சரிக்கை

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த மோதலானது மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகின் பிற பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவிவிடும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

“அமெரிக்கா எங்களைத் தாக்கினால், போர் மத்திய கிழக்கைக் கடந்து மற்ற இடங்களுக்கும் பரவும்” என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், மீண்டும் தாக்குதலைத் தொடங்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தான் ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடந்த ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. ஆனாலும், இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையே நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் புதிய அமைதி முன்மொழிவுகளில், அவர்கள் தங்களின் பழைய நிபந்தனைகளை மீண்டும் வலியுறுத்தி வருவதால், அமெரிக்கா அவற்றை முற்றிலுமாக நிராகரித்து வருகிறது.

இதன் காரணமாக, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டது. கடந்த செவ்வாய் கிழமை இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்த போதிலும், அடுத்த சில நாட்களிலேயே அந்த உத்தரவுகளை மீறி அமெரிக்கா ஒரு சில முறை நேரடியாகத் தாக்குதல்களை நடத்தியது. இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘ஈரான் விவகாரத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட வேண்டும். இல்லையெனில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். போரைத் தொடங்குவதற்கும் அமைதி வழியில் முடிப்பதற்கும் என்னிடம் இரண்டு வழிகளும் என்னிடம் உள்ளன. ஆனால், நான் பேசுவோர்தனைக்கு வாய்ப்பளிக்கிறேன். முடிந்தவரை உயிர்சேதத்தை தவிர்க்க விரும்புகிறேன்’ என்றார்.

Iran has warned that any renewed military attacks by the United States will expand the conflict beyond the Middle East into other regions. This statement follows US President Donald Trump’s warning of restarting attacks if an agreement is not reached, amid stalled peace talks where the US continues to reject Iran’s repetitive nuclear deal conditions despite an ongoing ceasefire.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *