மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிவாயு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் நேற்றைய முன்தினம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.
உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ள கட்டார் நாடு, தனது ஏற்றுமதியில் பெரும்பகுதியை இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாக மேற்கொள்கிறது. கட்டாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசிய நாடுகளில் இருந்தபோதிலும், இந்த விநியோகத் தடையானது சர்வதேச அளவில் ஒரு கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. இதன் நேரடி விளைவாக உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை மிக வேகமாகக் அதிகரித்துள்ளது.
மறுபுறம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது இந்த நெருக்கடியை இன்னும் மோசமாக்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயுவின் தேவை சற்றே குறைந்திருந்தாலும், அங்குள்ள சேமிப்பு இருப்பு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
எதிர்வரும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிவாயு இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, ஐரோப்பாவிற்கு ஒரு பாரிய பொருளாதாரச் சவாலாக அமையும் என பொருளாதார ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
The escalation of conflict in the Middle East, particularly Iran’s closure of the Strait of Hormuz, has caused a sharp spike in international gas prices due to disrupted shipping routes. This bottleneck significantly impacts Qatar’s global gas exports and, combined with the temporary closure of Israeli gas plants, creates a supply crunch that poses a major economic challenge for European nations needing to replenish their low reserves before summer.