லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். படகொன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பதவிகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு சிறுவர்கள் ஆவர்.
இளைஞர்களைத் தேடும் பணியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை மற்றும் முப்படையினரின் சுழியோடிப் பிரிவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
________________________________________________________________________________________________________________________________________________
Two 18-year-old boys from Padawikama are missing after their boat capsized while fishing in a water body in Lunugamvehera, Hambantota. Police, along with Navy and armed forces divers, are currently conducting a search operation to locate the missing teenagers.