தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசுவமடு புளியடி பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முயன்ற பெண்மணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கோரத்தினால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]